உலக மகப்பேறு தாய்ப்பால் ஊட்டுதலுக்கான வார விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பிஎஸ்ஜி மருத்துவமனையும், பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரியும் இணைந்து இன்று (01.08.17) உலக மகப்பேறு தாய்ப்பால் ஊட்டுதலுக்கான வார விழாவினை கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டுதலின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.