என்.ஜி.பி கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் அமைப்புக் கூட்டம்

டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக,  பெற்றோர் – ஆசிரியர்  அமைப்புக் கூட்டம் என்.ஜி.பி வளாகத்தில் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பயனாக்க அறிவியல் மற்றும் உயிர் அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் சுமார் 300 க்கும்  மேற்பட்டோர்  கலந்துகொண்டு  விழாவினைச் சிறப்பித்தனர். பெற்றோர்களுக்கு, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்கு குறித்த கருத்துக்களைப்  பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில்  காணொலிக் காட்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களின் ஒழுக்கம், முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள், கல்லூரி வளர்ச்சிக்கான கருத்துக்கள் மற்றும்  வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் போன்றவை குறித்து பெற்றோர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தின் முதல் நிகழ்வாக பெற்றோர்கள் ஆசிரியர்களை அணுகி  தங்களது மகன்/மகளின் வருகைப்பதிவு தேர்ச்சி விழுக்காடு போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. பின்னர் ஆராய்ச்சிப் புல  முதன்மையர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் வே.இராஜேந்திரன் அவர்கள் பெற்றோர் – ஆசிரியர்  அமைப்புக் கூட்டம்  குறித்தும் அதன் செயல்பாடுகள் மற்றும் வருகின்ற  ஆண்டுகளில் கல்லூரியின் வளர்ச்சிகளில் பெற்றோர் – ஆசிரியர் அமைப்பின் நிலைப்பாடுகள், அதன் பங்களிப்புகள் குறித்தும் உரையாற்றினார். கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களின் வளர்ச்சிக்குரிய செயல்பாடுகள் குறித்து தலைமையுரை நல்கிச் சிறப்பித்தார். என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலர் ஓ.டி.புவனேஷ்வரன் அவர்களும் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குனர் பெ.இரா.முத்துசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். பெற்றோர் ஆசிரியர் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் இக்கூட்டத்தின் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பெற்றோர் – ஆசிரியர்கழக உறுப்பினர் எஸ்.முருகானந்தம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.