தமிழகத்தில் இரண்டு நாட்கள் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்பிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேட்டூர்-6 செ.மீ, சத்தியமங்கலம்-5 செ.மீ, ஏற்காட்டில் – 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.