அரசு பள்ளியில் சானிடரி நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன் முதலாக சானிடரி நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் நிலையில் மாணவிகள் மட்டும் சுமார் 150 பேர் உள்ளனர். மாணவிகள் நலனுக்காக தமிழக அரசு சுகாதாரத் துறையின் மூலமாக பள்ளிகளில் சானிடரி நாப்கின் வழங்கி வருகிறது.

அதை பயன்படுத்தியபின் அழிப்பதற்கான சாதனங்கள் இதுவரையில் இல்லாமல் இருந்த நிலையில் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைபள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் வழங்கப்பட்டு, அதை பயன்படுத்தும் விதமும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பெண்கள் பயிலும் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டும் மின் இயந்திரம் பொருத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

thnks : https://bit.ly/2YAIyZ6