நாளை டி.என்.பி.எல். தொடங்குகிறது

கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு இந்தியாவில் பலரும் விரும்பும் ஒன்று. இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு முறை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக தான் இருக்கிறது.
இந்திய அளவில் ஐ.பி.எல். என்றால், தமிழ்நாடு அளவில் டி.என்.பி.எல். இது 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் மூலம் தொடங்கப்பட்ட இது, தொடங்கிய ஆண்டு முதலே தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.
அதே போல் இந்த ஆண்டு நாளை (19.7.19) தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டி சேபாக் சூப்பர் கில்லி அணிக்கும் திண்டுக்கல் ரைனோஸ் அணிக்கும் நாளை மாலை 7.15 மணிக்கு திண்டுக்கல் பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கப்போகிறது.
தூத்துக்குடி, சென்னை, மதுரை,கோவை, திருச்சி, திண்டுக்கல், காஞ்சி, காரைக்குடி ஆகிய 8 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன.
இந்த டி.என்.பி.எல். தொடரின் ஆரம்பத்தித்தில் 2016 ஆம் ஆண்டு தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு சென்னை அணியும், 2018 ஆம் ஆண்டு மதுரை அணியும் வெற்றி பெற்றது.