ஆர்.வி கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் ஐசிடி அகாடமி சார்பாக திறன்களை பயனுள்ள முறையில் மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் “இன்றைய போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களுடைய தொடர்பு திறன்களை பெருக்கிக் கொண்டால் மட்டுமே தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்” என்னும் கருத்தை வலியுறுத்தி திறன் பயன்பாட்டிற்கான வழிவகைகளை அழகான எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவு செய்யப்பட்டது. மேலும் இடைவிடாத பயிற்சியின் முக்கியத்துவம்    அறிவுறுத்தப்பட்டது.  இவை மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.