ஆடிப் பட்டம் தேடி விதை

தமிழில் உள்ள பனிரெண்டு மாதங்களில் ஆடி மாதத்திற்கென¢று ஓருதனிச்சிறப்பு உண்டு என்பதை அனைவரும் அறிவர். தமிழ் மாத பிறப்பு ஒவ்வொன்றுக்கும்முக்கியத்துவம் இருக்கிறது. நமது முன்னோர்கள்அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஒவ்வொரு மாதமும்ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆடி மாதம்:

அந்த வகையில், ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத்தொடங்குகின்றன. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டித்தொடங்கிவிடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும்விசேஷமானவை.

அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட்டால்பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். திருமணமாகாதவர்களுக்கு திருமண பாக்யம் கைகூடிவரும். புதுமணத்தம்பதியருக்கும் நீண்டகாலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன்கூடிய குழந்தை பாக்யம் உண்டாகும்.

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்குச்சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைப்பார்கள் தமிழ்மக்கள். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடி பௌர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோருக்குத்திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாகக்கருதப்படுகிறது.

ஆடி மாதத்தின் 18 ஆவது நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள். ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம்.

இத்தனை சிறப்புகள்மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்கக்கூடாது, செய்யக் கூடாது என்று கூறுவார்கள் ஏன் தெரியுமா? ஏனென்றால் இந்த ஆடி மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் என மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.

ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம். இறைவனைத்துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மிக ஸ்தலங்களுக்குச்சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.

மேலும் மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளன. இதில் தஷ்ணாயணம் ‘புண்ணிய காலம்’ ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் எனப்பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர்.

“ஆடிப் பட்டம் தேடி விதை” என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களைவிட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்லாமல், முருகப் பெருமானுக்கும் இந்த ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடி கிருத்திகை அன்று முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்துக் கோவில்களிலும் விழாக்கோலம் காணும். எனவே ஆடி மாத சிறப்பு நாட்களில் விரதம் கடைப்பிடித்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால், வளமான வாழ்வு நிச்சயம் கிடைக்கும். இந்த அற்புத ஆடியில், நாமும் அம்மனை வழிபட்டு வளமான வாழ்வு கிடைக்கப் பெறுவோமாக!