இனி வாரத்தில் ஒருநாள் பாலியல் கல்வி – அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவில் பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள்  தினம்தினம் வந்துகொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், வளரும் இந்தியாவின் நம்பிக்கை தூண்களாய் இருக்கும்  மாணவர்களுக்கு இதனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது எதிர் காலத்தில் இதை போன்ற வன்முறைகள் முற்றுலும் ஒழிக்கப்படுவதற்கான ஒரு முயற்சி.

வளரும் இந்த மாணவர்களுக்கு பாலியியல் குறித்த கல்வி மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனை செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் பாலியல் குறித்த வன்முறை குறைய அதிக படியான வாய்ப்புகள் உள்ளது.

அதனால், இனி வாரத்திற்கு ஒருநாள் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் கல்வி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.