“மாணவர்களுக்கு சமகால வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பகல்லூரி, கே.பி.ஆர் இண்டஸ்ட்டிரீ கனெக்ட் நிறுவனங்களின் மேலாளர்களையும் மற்றும் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களையும் அழைத்து  மாணவர்களுக்கு சமகால வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கினை நடத்தியது. முதல்வர் முனைவர் கே.பொம்மண்ண ராஜா இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார், கல்லூரியின் டீன் முனைவர் எஸ்.ராம்குமார், வரவேற்புரையாற்றினார். ஜோகோ கார்பரேசன் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேந்திரன் சிறப்புவிருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார், கேவ்லெட் பேக்கார்டு நிறுவனத்தின் கிளை தலைவர் சிவக்குமார்,சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார் . டெல்பி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம் நிறுவனத்தின் துணை மேலாளர் லாரன்ஸ் மற்றும் யாஜகி வயரிங் நிறுவனத்தின் மனிதவள பொது மேலாளர் மாத்தீவ் குணசீலன் உள்பட பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துக்கொண்டு மாணவர்களிடம் தொழில் நிறுவனங்களின் தற்போதைய வளர்ச்சி பற்றியும் எதிர்கால தேவை பற்றியும் எடுத்துரைத்தனர்.