தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு பரிசு

தேசிய மாதிரி ஆய்வு அலுவலக களப்பணி பிரிவு தமிழ்நாடு மற்றும் நடுவண் அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறையியல் துறையின் சார்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய புள்ளியியல் நாள் -2017 , 29.6.17 அன்று இராசி விதை மைய அரங்கில் நடைப்பெற்றது.

மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுநிலை வேளாண் புள்ளியியல் மாணவிகளான அ.இந்துஜா, பா.ஜீவரேகா, மு.மஞ்சுபாலா ஆகியோர் கலந்துக்கொண்டு இரண்டாவது பரிசு பெற்றுள்ளனர்.