செஸ் போட்டியில் முதல் பரிசு!

மாவட்ட அளவிலான ஏழு வயதிற்குட்பட்ட செஸ் போட்டி, பொள்ளாச்சி நாச்சியார் வித்யாலயம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் காங்கேயம் பிரைட் பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீயாஸ் என்ற மாணவன் கலந்துகொண்டு மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் பரிசு வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.