கோவையில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவு, குற்றப்புலனாய்வு பிரிவு கோவை மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இணைந்து  சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. இப்பேரணியில் S.செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் வரவேற்புரை ஆற்றினார்.  A.அமல்ராஜ், ஆணையாளர், கோவை மாநகர காவல், தலைமை தாங்கி இப்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். S.லட்சுமி, துணை ஆணையாளர், சட்டம் & ஒழுங்கு , Dr.துரை, துணை ஆணையாளர், போக்குவரத்து, S.சண்முகையா, காவல் துணை கண்காணிப்பாளர், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு முன்னிலை வகித்தனர். S.M.சட்டநாதன், உதவி ஆய்வாளர், போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு நன்றியுரை ஆற்றினார். இப்பேரணி கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தொடங்கி வ.உ.சி மைதானத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.