ஈசா பொறியியல் கல்லூரி சார்பில் 11வது கிரிக்கெட் போட்டி

கோவை நவக்கரை சாலையில் உள்ள ஈசா  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பில் 11வது  ஈசா சாம்பியன்  டிராபி  2019 கிரிக்கெட்  போட்டி  பிப்ரவரி  20  முதல்  22  வரை ஆகிய  மூன்று  நாட்கள் நடைபெற்றது.  கல்லூரியின் தலைவர்  ஈஸ்வரமூர்த்தி  தலைமையில் இப்போட்டி  நடைபெற்றது. இப்போட்டியின் கல்லூரி தலைமை  நடவடிக்கை அதிகாரி  ஆதர்ஷ்  தொடங்கி  வைத்தார்.

நாக்-அவுட் முறையில் நடைபெறும்  இப்போட்டிகள்  கோவை,  நீலகிரி,  திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய  மாவட்டங்களிலிருந்து பொறியியல்  மற்றும் தொழில் நுட்ப  கல்லூரி  மாணவர்களுக்கிடையே  போட்டிகள்  நடைபெற்றது.  6 ஓவர்கள் கொண்ட  இப்போட்டியில்  32 அணிகள்  பங்கேற்றன.  போட்டியில் வெற்றி  பெறும் முதல் அணிக்கு ரூபாய் 6000 பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெறும் அணிக்கு  ரூபாய் 3 ஆயிரம் மற்றும் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 2000 பரிசு தொகையாகவும் வழங்கப்பட்டது.  இதில், கல்லூரி தலைமை செயல் அலுவலர் அஜித், நிர்வாக அலுவலர் ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வர்  ராபர்ட் கென்னடி  ஆகியோர் கலந்து கொண்டனர்.  இப்போட்டியினை கல்லூரியின் உடற்கல்வி  இயக்குனர்  செந்தில்குமார்  ஒருங்கிணைத்தார்.