மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வேண்டுகோள் !

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்களும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களும் இன்று (26.12.18) புதுடெல்லியில் நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரண நிதி மற்றும் மத்திய அரசு 14 வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழக நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவையில் உள்ள மானிய தொகையினை வழங்கிட வேண்டுமென கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.