தொழில் முனைவோரை தேர்வு செய்வதற்கான நிகழ்ச்சி

கோவையில் நடைபெற்ற சிறந்த மாணவர் தொழில் முனைவோர்கள் தேர்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை தொழில் முனைவோர்கள் அமைப்பின் சார்பாக இந்த வருடத்திற்கான சிறந்த மாணவர், தொழில் முனைவோரை தேர்வு செய்வதற்கான நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர்,  திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த,  கல்லூரி மாணவர்களில் இருந்து சிறந்த தொழில் முனைவு மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் பேட்டரி கார், அலங்காரபொருட்கள் செய்தல், நவீன கால தொழில் நுட்பம் என பல்வேறு பிரிவுகள் குறித்து மாணவர்கள் பேசினர்.

இது குறித்து தேர்வு குழுவின் தலைவர், செந்தில் நடராஜன், மாணவர்கள் முன்வைத்த நவீன தொழில்நுட்ப ஸ்டார்ட் – அப் கருத்துக்களின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், இதில் தேர்வு செய்யப்படும் முதல் மற்றும் இரண்டாம் பிரிவு மாணவ தொழில் முனைவோர்கள், அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்திய அளவிலான இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.