பிரதமர் மோடிக்கு அமெரிக்கா பாராட்டு!

தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு நாடும் ஆதரவளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பெண்டகனில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ், தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. அவைக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவளிக்க இதுவே சரியான தருணம் என்று தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றால், தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தான் மக்களைக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டு வருவதாகவும் ஜிம் மேட்டிஸ் கூறியுள்ளார்.