கே.எம்.சி.எச் சார்பில் நிவாரண நிதி.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை (29.11.2018) அன்று முகாம் அலுவலகத்தில், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி அவர்கள் சந்தித்து “கஜா” புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.