பார்க் குளோபல் பள்ளியில் ஆவிகள்  தினவிழா

பார்க் குளோபல் பள்ளியில் வருடந்தோறும் ஆவிகள்  தினவிழா வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது. பார்க்  குளோபல் பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேய்கள் மற்றும் ஆவிகள் போல் வேடமணிந்து கொண்டாடினர்.

இந்த வருட பேய்கள் தின விழாவில் மையகருத்தாக “எகிப்தியர்களின் பிரமிடு ” என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு நடனங்களும், நாடகங்களும் அரங்கேற்றப்பட்டது.குழந்தைகள், அரசி கிளியோபட்ரா போல வேடமணிந்தும், எகிப்திய மக்களின் உடைகளை அணிந்தும், தங்களின் ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்தனர்.

இந்த விழாவின் நோக்கமானது குழந்தைகள் பேய்/ஆவி பற்றிய பயத்தை போக்கவும் மரண பயத்தை போக்கவும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.