பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க மானியம்: வேளாண் துறை தகவல்

பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் செயல்விளக்க திடல் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளார்

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் அன்னூர், எஸ்.எஸ்.குளம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய வட்டாரங்களில் இறவை பாசனத்திலும், மானாவாரியாகவும் 1,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ரூ.3.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நீண்ட இழைகள் கொண்ட பருத்தி செயல்விளக்க திடல் 20 ஹெக்டேரிலும், அடர் முறையில் பருத்தி செயல்விளக்க திடல் 10 ஹெக்டேரிலும் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செயல்விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. புதிய பருத்தி ரகங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த ஊரக நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பருத்தி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்களில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.