அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: கோவையில் பக்கோடா வைத்து காங்கிரசார் ஆர்பாட்டம்

கோவையில் அக்னி பாத் திட்டத்தை கைவிடக் கோரி பக்கோடா வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்பாட்டம் செய்துவரும் நிலையில் கோவையில் மாநில செயற்குழு தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியும் கையில் பக்கோடா தட்டை வைத்தும் நூதன முறையில் அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.