சல சலப்பில் முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழுந்தது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, (ஜூன் 23 ) இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில்  ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார்.

அப்போது, அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர்.  அங்கு  ஓ.பன்னீர் செல்வம் வெளியேற சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்களும்  எழுப்பப்பட்டது.  இதனால், அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இருந்து 9 மணிக்கு கிளம்பியவர் 11 மணிக்குத்தான் வானகரம் வந்தார். 2 மணி நேரம் அவரது கார் மெதுவாக ஊர்ந்து வந்தது.

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், வெல்லமணி நடராசன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பட்டது. அதனால், மேடையில் அமராமல் அவர்கள் கீழே இறங்கினர்.  ஒன்பது  நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக சந்தித்து பேசிக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர் செல்வம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக மேடையிலேயே கடும் ஆவேசத்துடன் கூடியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, தனது பேச்சை தொடங்கும் போதே “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.. அந்த தலைவர் எங்கே இருக்கிறார் அவர் விரைவில் வருவார்” என மிக ஆவேசமாக வசப்படினார்.

தமிழ் மகன் உசேன் அ.தி.மு.க.வின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முன்னதாக, இந்த அறிவிப்பின் போது எடப்பாடியின் மீது மாலை போட வந்த நிர்வாகிகளை.. இருங்கப்பா .. நீங்க வேற.. பேச விடுங்க என்று கோபமாக எடப்பாடி பழனிசாமி கடிந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, “இரட்டைத் தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு, சங்கடம் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்ய வேண்டும். ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்” என்றார்.

அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அ.தி.மு.கவின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11ல் அ.தி.மு.க.வின் பொதுக்குழு மீண்டும் கூடும் என, அறிவித்தார்.

சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு இது. கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான செயல்பாடு இது என்று வைத்தியலிங்கம் கூறிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம் வெளிநடப்பு செய்தனர்.

சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம் என, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் அறிவித்தார். பாதியிலேயே எதிர்ப்பு தெரிவித்து மேடையில் இருந்து ஓ பன்னீர்செல்வம் வெளியேறியது போது,  ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் அங்கு  பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.