இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: 12 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12,249 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவர பட்டியல் தெரிவிக்கிறது.

கடந்த 24 மணி நேர புள்ளி விவரங்கள் படி, இந்தியாவில் இன்று ஒரே நாளில் 12,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் 9,862 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். நாடு முழுவதும் இன்று மட்டும் 13 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது 81,687 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.60 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது.