அரசு கல்லூரிகளில் சேர எப்போது விண்ணப்பிக்கலாம்?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22-ம் முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதியை மாற்றம் செய்து உயர்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 27 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 22-ம் முதல் www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 7-ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.