ஆசிரியர்கள் கட்டாயம்  ஒராண்டு மலைப்பகுதி பள்ளியில் பணியாற்ற உத்தரவு

மலைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஒராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில்  மலைகள் அதிகம் உள்ளன.

இந்நிலையில் மலை பகுதியிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் மலைப்பகுதி சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவதால் ஓராண்டு கட்டாயப்  பணி அமல்படுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் அந்த பள்ளி ஆசிரியர்கள் பணிக்காலம் முழுமை பெறும் வரை பணியாற்றுவார்கள்.

மேலும், பதவி உயர்வுக்கான பணியிடங்களில் காலியிடங்களை முதலில் மலைப் பகுதிக்கு வழங்க முன்னுரிமை செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.