அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு – பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தமிழகத்தில், ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்த பயிற்சி வகுப்பு வரும் 18ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல், மின்னணு பதிவேடுகளைப் பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.