அரிமா சங்கம் சார்பில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட நேருநகர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள், புதிதாக பயில வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாநகராட்சி மாமன்ற 7 வது வார்டு உறுப்பினர் கோவிந்தராஜன், நேரு நகர் அரிமா சங்கத்தைச் சேர்ந்த மாவட்ட சுதந்திர தின விழிப்புணர்வு தலைவர் அரிமா காளியப்பன், நேரு நகர் அரிமா சங்க தலைவர் அரிமா செந்தில்குமார், இளஞ்சேரலதான், பள்ளித் தலைமையாசிரியர் சீதாலட்சுமி, அரிமா தேஜஸ் சுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகளை நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் வரவேற்று, இனிப்பு, ரோஜாப்பூ வழங்கப்பட்டு பேனா, நோட்டுப் புத்தகம் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டது.