அன்பை சுமந்து சுமந்து…

”உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தந்த தெய்வம் அம்மா” ஏன், இப்படியொரு கவிதையினு கேக்குறீங்களா? இன்னைக்கு அன்னையர் தினம் இல்ல. அட ஆமாங்க, இன்னைக்கு அன்னையர் தினம் இல்ல.  அதனால என்னங்க… அன்னையர் தினத்தன்று தான் சொல்லனுமா என்ன? இங்கொரு  தாய் கரடி இரண்டு குட்டி கரடிகளை தன் முதுகில் சுமந்துட்டு போன அழகை பார்த்ததும் கவிதை தானா வருது.

கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தாய் கரடி ஒன்று தன் முதுகில் இரண்டு குட்டிகளை பாதுகாப்பாக சுமந்து சாலையை கடந்துவாரு எதிர்ப்புறம் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் காட்சியை கண்டு மனம் உருகி போனது.

அந்த வழியே சென்ற ஒரு நபர், தாய் தனது குட்டிகளை சுமந்து சென்ற அருமையான காட்சிகளை படம் எடுத்து வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.