திருமண விழாவில் வைகோ – நா.கார்த்திக் சந்திப்பு

கோவை குரும்பபாளையம், குறிஞ்சி மகால் திருமண மண்டபத்தில், மதிமுக மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமியின் மகள், மதிவதனி – கனகசபாபதி ஆகியோரின் திருமணம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். பின்னர் வைகோவை சந்தித்து அவர் மரியாதை செய்தார்.