கூட்டுறவு வங்கிகளில் 100% நகைக் கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு, 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் காரணமாக தகுதியான நபர்களை கண்டறிவதற்காக நகை கடன் பெற்றவர்களின் விவரங்களான பெயர், ஆதார் எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து  ஆய்வு செய்யப்பட்டன.

நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என, அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

இதுக்குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் படி, 14 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று பேசினார்.