புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்வோருக்கான தேசிய தின கொண்டாட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அருங்காட்சியகத்தில் புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்வோருக்கான தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனை கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை, பி.எஸ்.ஜி மருத்துவமனைகயுடன் இணைந்து நடத்தியது.

இதில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனர் சதாசிவம் கலந்துகொண்டார். மேலும், கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையின் அறங்காவலர் சைலஜா, மருத்துவர் ஹர்ஷா மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மெடிக்கல் ஆன்காலஜிஸ்ட் மருத்துவர் மதுலிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலர் கலந்துகொண்டு தங்களின் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் உரையாடல், உயிர் பிழைத்தவர்களுக்கான வாழ்க்கை முறை மாற்றம் பற்றிய கலந்துரையாடல், சிரிப்பு சிகிச்சை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.