கூடைப்பந்து போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் கோப்பையை வென்றது

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம் அணி மற்றும் ஆண்கள் பிரிவில் இந்திய கப்பல் படை அணிகள் வெற்றிபெற்று கோப்பையை வென்றன.

கோவையில் கூடைப்பந்து கழகம் சார்பில், கடந்த 29ம் தேதி முதல் ஜுன் 3ம் தேதி வரை, அகில இந்திய அளவிலான 55 வது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 19 வது ஆண்டு பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.

இதில், ஆண்கள் பிரிவில் 9 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.

இப்போட்டியில், பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம் அணி மற்றும் ஆண்கள் பிரிவில் இந்திய கப்பல் படை அணிகள் வெற்றிபெற்று கோப்பையை வென்றன.

கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் சி. ஆர். ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனருமான செல்வராஜ்  முன்னிலை வகித்தார்.

இந்த போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஜூன் 3ம் தேதி அன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய, ஆண்கள் பிரிவு போட்டியில் மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில், கேரளா மாநில மின்சார வாரியம் அணியை எதிர்த்து இந்திய விமானப் படை அணி விளையாடியது. இதில், கேரளா மாநில மின்சார வாரியம் அணி 72 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்று மூன்றாம் இடத்தையும், எதிர்த்து விளையாடிய இந்திய விமானப் படை அணி 53 புள்ளிகள் எடுத்து நான்காம் இடத்தையும்  பிடித்தது.

பெண்கள் பிரிவு போட்டியில், கேரளா போலீஸ் அணியை எதிர்த்து கிழக்கு இயில்வே அணி விளையாடியது. இதில், கேரளா போலீஸ் அணி 63 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்று மூன்றாம் இடத்தையும், எதிர்த்து விளையாடிய கிழக்கு இயில்வே அணி 61 புள்ளிகள் எடுத்து நான்காம் இடத்தையும்  பிடித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து, ஜூன் 3ம் தேதி  மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற, 19வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம் அணியை எதிர்த்து தென்மேற்கு இரயில்வே அணி விளையாடியது. இதில், கேரளா மாநில மின்சார வாரியம் அணி 64 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய தென் மேற்கு இரயில்வே அணி 39 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

அன்று மாலை 6.15 மணிக்கு நடைபெற்ற, 55வது நாச்சிமுத்து கவுண்டர் ஆண்கள் பிரிவு, இறுதிப் போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து இந்தியன் இரயில்வே அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 83 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய இந்தியன் இரயில்வே அணி 70 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

இறுதிப் போட்டியில், வெற்றி பெற்ற இந்திய கப்பல் படை ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.1,00,000 மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பிடித்த இந்தியன் இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.50,000 மற்றும் மகாலிங்கம் கோப்பையும் வழங்கினார்.

மூன்றாம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரியம் அணிக்கு பரிசாக ரூ.20,000 வழங்கப்பட்டது, நான்காம் இடம்பிடித்த இந்திய விமானப் படை அணிக்கு ரூ.15,000  வழங்கப்பட்டது, மேலும் தேர்வு செய்யப்பட்ட திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரியம் அணிக்கு நன் நடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது மற்றும் ரூபாய் 10,000 வழங்கினார்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற கேரளா மாநில மின்சார வாரியம் அணிக்கு முதல் பரிசு ரூ.50,000 மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற தென் மேற்கு இரயில்வே அணி அணிக்கு பரிசாக ரூ.25,000 மற்றும் சுழற் கோப்பையும்,  மூன்றாம் இடம் பிடித்த கேரளா போலீஸ் அணிக்கு பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. நான்காம் இடம் பிடித்த கிழக்கு இயில்வே அணிக்கு ரூ.10,000 வழங்கப்பட்டது.

மேலும், இத்தொடரில் சிறப்பாக விளையாடிய கிழக்கு இரயில்வே அணியை சேர்ந்த நிமா துமா புதியா வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை பெற்றார். சிறந்த வீரருக்கான விருது இந்திய கப்பல் படை அணியின் கவுரவ் சந்தேலுக்கு வழங்கப்பட்டது.