புகையிலை ஒழிப்பு தினம் கே.எம்.சி.ஹெச் சார்பில் கையெழுத்து நிகழ்ச்சி

புகையிலை பயன்பாட்டின் கெடுதல்களையும் அதனை தடை செய்யவேண்டிய முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை புகையிலையை கைவிடுவோம் என்ற ஒரு கையெழுத்து நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கலந்துகொண்டு, கே.எம்.சி.ஹெச் மருத்துவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இதுபோன்ற தொடர் முயற்சிகளின் மூலம் புகையிலை பயன்பாட்டை முழுமையாக தடை செய்வதில் கே.எம்.சி.ஹெச் பெரும் பங்காற்றும் என்று மருத்துவமனையின் இயக்குனர் நம்பிக்கை தெரிவித்தார்.