பி.எஸ்.ஜி மருத்துவமனைகள் மற்றும் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வேடப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி கிராமப்புற சுகாதார மற்றும் பயிற்சி மையத்தில் சமூக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
‘புகையிலை நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்’ என்ற கருப்பொருளில் இந்த சமூக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை கோவை புற்றுநோய் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.