வலுதூக்கும் போட்டியில் எஸ்.டி.சி கல்லூரி மாணவர்கள் முதலிடம்

தென்னிந்திய அளவிலான ஜூனியர் பிரிவு வலுதூக்கும் போட்டியில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி (STC) மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டிகள் ஆந்திர மாநிலம் அனேகா பள்ளியில் மே 20 முதல் 22 வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற எஸ்.டி.சி கல்லூரி மாணவர்கள் ரூபன் 105 கிலோ எடை பிரிவில் 805 கிலோ எடையினைத் தூக்கி முதலிடத்தையும், நிர்மல் 74 கிலோ எடைப் பிரிவில் 657.5 கிலோ எடையினை தூக்கி முதலிடத்தையும் கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் விஜயமோகன், துணைத்தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், முதல்வர் சோமு, இயக்குநர் நந்தகோபால், உடற்கல்வி துறை இயக்குநர் பாரதி, துணை இயக்குநர்கள் ரேவதி, சதாம் உசேன் ஆகியோர் பாராட்டினர்.