4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமம் கொள்கின்றனர் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு ஆங்கிலத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு செல்லுகின்ற போது ஆங்கிலம் பேச சிரமப்படுகின்றனர்.

இந்தநிலையில், 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தி ஆங்கிலப் புலமை உடையவர்கள் அடையாளம் காண கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான ஆசிரியர்களுக்கு வருகின்ற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.