எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கல்லூரியில் ‘மிராரி – 2022’ போட்டி

கோவையில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ்  இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கல்லூரிகளுக்கிடையே ‘மிராரி – 2022’ போட்டி நடைபெற்றது.

கல்லூரியின் தாளாளர் இராஜலட்சுமி, தலைவர் சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், முதன்மை அதிகாரி டேனியல், முதல்வர் அனிதா, துணை முதல்வர் நரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த போட்டியில் நடனம், ஓவியம், பாட்டு , ஆடை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவையைச் சுற்றியுள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் மாணவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களையும் வழங்கினார். மாற்றுத் திறனாளிப்  போட்டியாளர்களுக்கு  சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மிராரி- 2022 இன் ஒட்டுமொத்த கோப்பையை கோவை கே.ஜி கலை அறிவியல் கல்லூரி வென்றது.