ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் ‘சந்தை தினம்’

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.பி.ஏ. மற்றும் பி.பி.ஏ. சி.ஏ. துறைகள் சார்பில், சந்தை தினம் (Market Day) கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்து, சந்தை தினவிழாவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பி.பி.ஏ. சி.ஏ. மற்றும் பி.பி.ஏ.துறை மாணவர்கள் 540 பேர், 30 அரங்கங்களில் பல்வேறு பொருட்களை வைத்து வியாபாரம் செய்தனர்.

ஹோட்டல், துணிக் கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என ஏராளமானப் பொருட்களைச் சந்தைப்படுத்தினர். இவற்றைக் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாங்கி மாணவர்களை உற்சாகமூட்டினர்.

இதன்மூலம் சந்தை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், வியாபார யுக்திகளை வெளிப்படுத்தி, நுகர்வோருக்குப் பொருட்களை எவ்வாறு விற்பது என்பதை அறிந்துக் கொண்டனர்.