நேரு பொறியியல் கல்லூரியில் ‘அவதார் கலாச்சார விழா’

நேரு பொறியியல் கல்லூரியில் “அவதார் கலாச்சார விழா-2022” (AVATHAR CULTURAL FEST-2022) கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு கலாச்சார போட்டிகள் நடைப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்துகொண்டு பேசுகையில், கல்லூரி காலங்கள் சிறப்பான வாய்ப்பை மாணவர்களுக்கு உருவாக்கி தரும். பெற்றோர்கள் சொல்லும் வழியில் சென்றால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார், சூப்பர் சிங்கர் ஷ்யாம் விஷால் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் கிருஷ்ணகுமார்,  ஒருங்கிணைபாளர் விஜயராஜ குமார், கல்லூரி முதல்வர் மணியரசன் மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர் சுடர்மணி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.