பார்க் பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் துறை சங்கம் துவக்கம்

கணியூர் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் சங்கம் துவக்க விழா இரு நாட்கள் நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் முன்னாள் இயக்குனர் ரங்கசாமி கலந்துகொண்டார்.

துவக்க உரையில் பேசிய கலூரியின் முதல்வர் மோகன்குமார் “நவீன காலத்தில் வேளாண் துறையின் வளர்ச்சி” பற்றி பேசினார்.

பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி தனது தலைமை உரையில், சுற்றுப்புற சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றி பேசினார்.

சிறப்பு விருந்தினர் ரங்கசாமி ‘துரிய பண்ணையம் மற்றும் நீர் பாசன முறை’ பற்றி சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் ஸ்ரீதர் “இயந்திரவியல் மற்றும் நவீன செயலிகள்” என்ற தலைப்பிலும், ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் ராஜ்குமார் “உணவு பதப்படுத்தும் முறை மற்றும் ஊட்டச்சத்தின் பங்கு மற்றும் அதன் தேவை” என்ற தலைப்பிலும் பேசினர்.

தொடர்ந்து மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் விஞ்ஞானி பாலசுப்ரமணியன் “விவசாயத் துறையில் தற்போது இருக்கும் சிக்கல்களையும் அவற்றை களைய நாம் நவீன சாதனங்களை பயன்படுத்தும் முறை” பற்றியும் விளக்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரி வளாகத்தில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.