டென்மார்க் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விமானத்தில் டென்மார்க் தலைநகர் கொபென்ஹஜெனுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய பிரதமர் மோடி சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாள் நேற்று ஜெர்மனி சென்ற அவர், ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை சந்தித்து பேசினார்.

பயணத்தின் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றுள்ளார். டென்மார்க் பிரதமர் விமான நிலையத்திற்கு நேரடியாக வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடியை தனது அலுவலகத்துக்குச் அழைத்துச் சென்ற டென்மார்க் பிரதமர் அங்கு விஸ்தாரமாக உள்ள புல்வெளி பரப்பை சுற்றிக்காட்டி அது குறித்து பேசினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வர்த்தகம், அரசியல் என பல்வேறு விஷயங்களில் டென்மார்க்குடனான இரு தரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணவும், உடனடியாக போர் நிறுத்தத்திற்கு, பேச்சுவார்த்தை பாதை மற்றும் திட்டத்தை தேர்வு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.