ஏஐசி ரைஸ் சார்பாக ‘டெக்ஸ்டார்ஸ் ஸ்டார்ட்அப்’ நிகழ்ச்சி

கோவையில், ஏஐசி ரைஸ் சார்பாக டெக்ஸ்டார்ஸ் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இரத்தினம் குழு நிறுவனங்கள் கலந்துகொண்டனர்.

10 குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் தொடக்க யோசனையில் பணியாற்றத் தொடங்கினர். இரண்டாவது நாளில், அணிகளுக்கு 6 பேர் கொண்டு அஜய் ஜெய், பிரசாந்த் கணேசன், கிருஷ்ணகுமார், செந்தில், விஜய் ஜெயகோபால், பிரசாந்த் நாயர் ஆகியோர்கள் வழிகாட்டினர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஸ்டார்ட் அப் பிட்ச் விளக்கக் காட்சியின் இறுதி நாளான இளம் தொழில்முனைவோர் தங்களது ஸ்டார்ட்அப் யோசனைகளை ஐந்து நடுவர் குழுவின் முன் முன்வைத்தனர்.

இதில் முதல் மற்றும் இரண்டாம் ரன்னர் அப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.