பெதஸ்தாவில் புதிய பிரார்த்தனை அரங்கம் திறப்பு

காருண்யா நகரிலுள்ள பெதஸ்தா ஜெப மையத்தின் பிரார்த்தனை அரங்கம் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.

காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன், கோவை சி.எஸ்.ஐ. திருச்சபையின் பேராயர் மாமறைதிரு. தீமோத்தேயு ரவீந்திரன், இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் பால்தினகரன், டாக்டர் ஷில்பா சாமுவேல் ஆகியோர் பிரார்த்தனை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இதில் இயேசு அழைக்கிறார் ஆன்மீக நிறுவனத்தின் ஊழிய அதிகாரிகள், காருண்யா பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், சீஷா தொண்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.