காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் சுதாகர்

கோவை 46 வது வார்டில் பாஜக சார்பில் சுதாகர் என்பவர் தள்ளுவண்டி தள்ளி சென்று, காய்கறி விற்பனை செய்தபடி சுதாகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளும், சுயேட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் கோவை மாவட்டத்தில் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 46 வது வார்டில் பாஜக சார்பில் சுதாகர் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இரத்தனபுரி பகுதியில் மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை தள்ளுவண்டியில் தள்ளிபடி சென்று, காய்கறி விற்பனை செய்தபடி சுதாகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாஜக வெற்றி பெற்றால் மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதேபோல் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார்.