திமுக சார்பில் பொங்கல் பரிசு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 57 வது வார்டில் வசிக்கும் 4000 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுளை திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்மையும் காத்து நம் சுற்றத்தாரையும் காக்க முன்னெச்சரிக்கையோடு இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.