“எப்போ வருவாரோ” – எட்டாம் நாள் : பாரதியார் பற்றி சிறப்புரை

புத்தாண்டை ஆன்மிக ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ஆன்மீக உற்சவமான “எப்போ வருவாரோ” – 2022 நிகழ்ச்சியின் எட்டாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் எட்டாம் நாள் அமர்வில் இசைக்கவி ரமணன் கலந்து கொண்டு பாரதியார் பற்றி உரையாடினார்.

அதற்கு முன்னர் தன்னலமற்ற சேவை செய்கின்றவர்களை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கௌரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் எட்டாம் நாள் நிகழ்வில் கணேஷ் குமார் என்பவருக்கு “அருள் வளர்செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.