ஒமைக்ரான் பரவலின் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது – உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், பரவலின் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் கொரோனாவின் ஒமைக்ரான் உருமாற்றம் கண்டறியப்பட்டது. அதோடு இந்த வைரஸ் டெல்டாவை விட வீரியம் மிக்கது, பரவும் தன்மை அதிகம், தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் களைகட்டியுள்ளதோடு, மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் சுற்றும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரசை விட ஒமைக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.