கோவையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள தலைமை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அகில இந்திய பட்டதாரி தொழிலாளர் பொறியாளர் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் சார்பில் ஊழியர்கள் இன்று தொடர் 3 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், மறுசீரமைப்பு உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும். 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தளர்வு அளித்து அனைத்து பதவிகளுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும். சி.எ.ஓ பதவி உயர்வுக்கான தகுதி சேவையில் தளர்வு அளிக்க வேண்டும். தற்காலிக பதவி உயர்வுகளை தவிர்த்து நிரந்தர பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.