சோமோட்டோ, ஸ்விக்கி, ஓலா, உபேர் மின்சார வாகனங்களுக்கு மாற டெல்லி அரசு அறியுறுத்தல்

இ – கமெர்ஸ் நிறுவனங்கள், சோமோட்டோ, ஸ்விக்கி, ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறும்படி டெல்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்பும் போது மாசு-கண்காணிப்பு (PUC) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கக்கூடாது கூடாது என பெட்ரோல் பங்க்குகளுக்கும் உத்தரவிடப்படள்ளது.

டெல்லியில் காற்று மாசு அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால், மக்கள் சுவாசிப்பதற்கு கூட சிரமப்படும் நிலையில், காற்று மாசு பிரச்னைக்கு தீர்வு காண, டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு 2 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள், ‘சோமோட்டோ, ஸ்விக்கி, ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறும்படியும், இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்பக் கூடாது என பெட்ரோல் பங்க்குகளுக்கு உத்தரவிடப்பட உள்ளது,’ என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டெல்லி போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான கால அவகாசம் மற்றும் பல கட்டங்களில் இதற்கான நடவடிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் இது குறித்த வரைவு வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.