விஷாலுடன் நடித்த பிறகு பயப்படும் சமந்தா

விஷால் மற்றும் சமந்தா இணைத்து நடித்த இரும்புத்திரை படம் வரும் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்கிறார். அவர் படத்தை பற்றி கூறுகையில்,” இரும்புத்திரை படத்தில் நடித்த பிறகு செல்போனை பார்த்தால் பேயை பார்ப்பது போல பயமாக உள்ளது. இன்டர்நெட்டால் இவ்வளவு பிரச்சனை ஏற்படுமா என்று பயமே வந்துவிட்டது. இன்டர்நெட் மூலம் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும், நம் பிரைவசி எப்படி கசிகிறது என்றும் இன்டர்நெட்டை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது”. .