என்.ஜி.பி மாணவர் தங்கப் பதக்கம் பெற்று வெற்றி

என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் இந்தோ – நேபாள இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நேபாள இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு மன்றம் ஏப்ரல் 2021 இல் இந்தோ – நேபாள இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியை நடத்தியது.

இதில் கோவை டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர் ஹரிபாஸ்கர் கலந்து கொண்டார். அவரது அணி போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவின் கீழ் வெற்றி பெற்றது. மாணவர் வெற்றியாளர் தங்கப் பதக்கம் மற்றும் வளர்ச்சிக்காக படிவம் 1 சான்றிதழைப் பெற்றார்.

இம்மாணவரின் சர்வேதேச முயற்சிகளுக்கு கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி, முதல்வர் பிரபா, இயந்திரவியல் துறைத்தலைவர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.